திருப்பூரில் காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் இளம்பெண் தற்கொலை!

 

திருப்பூரில் காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் இளம்பெண் தற்கொலை!

திருப்பூர்

திருப்பூரில் காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் பெருமாநல்லூர் அருகே உள்ள கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் துளசிராஜ் (28). இவர் அங்குள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளி ஆக பணிபுரிந்து வருகிறார். துளசிராஜ், நந்தினி என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே, துளசிராஜுக்கு மது அருந்து பழக்கம் இருந்துள்ளது. மேலும், சம்பாதிக்கும் பணத்தில் மது அருந்திவிட்டு, குடும்ப செலவுக்கு பணம் தராமல் இருந்துள்ளார்.

திருப்பூரில் காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் இளம்பெண் தற்கொலை!

இதுகுறித்து கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் நந்தினி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலின் பேரில் பெருமாநல்லூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.