கொரோனாவால் திருமணமான சில நிமிடங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்ட மணப்பெண்.. சோகத்தில் புதுமணத் தம்பதி!

 

கொரோனாவால் திருமணமான சில நிமிடங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்ட மணப்பெண்.. சோகத்தில் புதுமணத் தம்பதி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுதியுள்ளன. இருப்பினும் கொரோனா கட்டுக்குள் வராததால், கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனிடையே கொரோனாவால் பல திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல், நிச்சயிக்கப்பட்டிருந்த பல திருமணங்கள் குடும்பங்களின் முன்னிலையில் நடந்து முடிந்தது. இவ்வாறு புதுமணத் தம்பதிகளின் வாழ்க்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் திருமணமான சில நிமிடங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்ட மணப்பெண்.. சோகத்தில் புதுமணத் தம்பதி!

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஒரு புதுமண தம்பதிக்கு திருமணம் நடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா சோதனை முடிவுகள் வருவதற்கு 2 நாட்கள் ஆவதாக கூறப்படும் நிலையில், திருமணத்திற்கு முன்னரே அந்த பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாம். அந்த பெண்ணுக்கு திருமணம் இன்று திருமணம் நடந்து முடிந்தவுடன், கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, திருமணமான சில நிமிடங்களிலேயே மணப்பெண் தனிமைப்படுத்தப் பட்டதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், புதுமணத் தம்பதியும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.