வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை – சார் ஆட்சியர் விசாரணை!

 

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை – சார் ஆட்சியர் விசாரணை!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே வரதட்சணை கேட்டு கணவர் துன்புறுத்தியதால், இளம்பெண் கிணற்றில் குதித்த தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட அனுமந்தபுரம் குடியூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மாதேவன். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சந்திரம்மாள் (22) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில், சந்திரம்மாளிடம் வரதட்சணை பெற்று வருமாறு மாதேவன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை – சார் ஆட்சியர் விசாரணை!

கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும், மாதேவன் வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த சந்திரம்மாள் வீட்டில் இருந்து கோபித்து கொண்டு சென்றுள்ளார். இந்த நிலையில், மறுநாள் காலை அங்குள்ள விவசாய கிணற்றில் சந்திரம்மாள் சடலமாக மிதந்தார். தகவலின் பேரில், கெலமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, சந்திரம்மாளின் தாயார் மாதேவியம்மா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே திருமணமாகி 3 ஆண்டுகளில் மணப்பெண் உயிரிழந்ததால், இதுகுறித்து ஓசூர் சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.