‘தமிழகத்திற்கும் வந்துடுச்சு’ ஒருவருக்கு உருமாறிய கொரோனா உறுதி : அதிர்ச்சி தகவல்!

 

‘தமிழகத்திற்கும் வந்துடுச்சு’ ஒருவருக்கு உருமாறிய கொரோனா உறுதி : அதிர்ச்சி தகவல்!

தமிழகத்திலும் ஒருவருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் உறுதியாகி இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதியானது. அவர்களது மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா உறுதியாகியுள்ளது. உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நபருக்கு தனியறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கும் கொரோனா இல்லை என தெரிய வந்துள்ளது” என தெரிவித்தார்.

‘தமிழகத்திற்கும் வந்துடுச்சு’ ஒருவருக்கு உருமாறிய கொரோனா உறுதி : அதிர்ச்சி தகவல்!

மேலும், “தமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவ வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த நபர்களின் மாதிரியை புனே ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம்” என்றும் கூறினார். பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதியானதாக மத்திய அரசு இன்று காலை அறிவித்த நிலையில், தற்போது தமிழகம் வந்த ஒருவருக்கு உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.