தமிழகத்தில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன!

 

தமிழகத்தில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன!

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை 6 மணிமுதல் தொடங்கப்பட்ட ஊரடங்கு வரும் 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் . இறுதி சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன!

ஏற்கனவே இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட உணவகங்கள் , தேநீர் கடைகள் ,நடைபாதைக் கடைகள், இனிப்பு கார வகைகள் விற்பனை கடைகள் ஆகியவை வழக்கமாக 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன!

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைக் உட்பட்ட நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த விவரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல் புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்படுகிறது.