புதிய உச்சம் கண்ட கேரளா… ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனா!

 

புதிய உச்சம் கண்ட கேரளா… ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனா!

இதுவரை இல்லாத அளவாகக் கேரளாவில் இன்று ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். அதன் பிறகு கேரள அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக மிகப்பெரிய அளவில் கொரோனா பரவல் ஏற்படவில்லை. மிகப் பெரிய அளவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது.

புதிய உச்சம் கண்ட கேரளா… ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனா!

தற்போது வெளிநாடுகளில் இருந்து அதிகப்படியான தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இந்தியாவிலேயே மிக அதிக விமானங்கள் கேரள மாநிலங்களுக்கு இயக்கப்பட்டுள்ளன. இப்படி வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இன்று கேரளாவில் 195 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கேரளாவில் இதுவே முதல்முறை. இதன் மூலம் கேரளாவின் மொத்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4,071 ஆக அதிகரித்துள்ளது.