தமிழகத்திற்கு புதிய ஆளுநர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!!

 

தமிழகத்திற்கு புதிய ஆளுநர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!!

தனிப்பட்ட முறையில் என் மீது அன்புடன் பழகியவர் பன்வாரிலால் புரோகித் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு புதிய ஆளுநர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தமிழக ஆளுநராக நாகாலாந்து ஆளுநர் ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டுள்ளார். பீகாரை சேர்ந்த இவர் காவல் துறை அதிகாரி மற்றும் இந்திய‌ உளவுத்தறை சிறப்பு இயக்குநராகவும், தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பதவி வகித்துள்ளார்.இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்! தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்! தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது! ” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் தனது மற்றொரு பதிவில், “பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கிறோம்!
தனிப்பட்ட முறையில் என் மீது அன்புடன் பழகியவர் அவர். இனிமையான நட்பு உங்களுடையது. தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது! ” என்று பதிவிட்டுள்ளார்.