உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை!

 

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி  : தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று முதல் வருகிற 13-ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13-ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி  : தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை!

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். இன்று முதல் வருகின்ற 11ம் தேதி வரை தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகள் , அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி  : தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை!

12-ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில், பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இன்று முதல் வருகிற 13-ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மேற்கூறிய பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.