நெல்லையில் மேலும் 35 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு 2,642 ஆக உயர்வு!
Jul 20, 2020, 10:40 IST1595221856000
தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 4,979 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது. மேலும், சென்னையில் 85,859 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக கொரோனா பாதிப்பில் பெருமளவு சென்னையிலேயே இருப்பினும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதனிடையே சென்னையை தவிர பிற மாவட்டங்களில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தின் பாதிப்பு விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அம்மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,642 ஆக உயர்ந்துள்ளது.