நெல்லையில் மேலும் 175 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு 5,387 ஆக அதிகரிப்பு!

 

நெல்லையில் மேலும் 175 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு 5,387 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,881 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,935 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 99,794 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

நெல்லையில் மேலும் 175 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு 5,387 ஆக அதிகரிப்பு!

குறிப்பாக மதுரை, விருதுநகர், நெல்லை, தேனி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது. அம்மாவட்டத்தில் மேலும் 175 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 5,387 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக நெல்லை நகரில் 57 பேரும், அம்பாசமுத்திரத்தில் 30 பேரும் நாங்குநேரியில் 25 பேரும் வள்ளியூரில் 27 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.