நீட் தேர்வு மீண்டும் மாற்றம்! – ஜே.இ.இ நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு

 

நீட் தேர்வு மீண்டும் மாற்றம்! – ஜே.இ.இ நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு

நீட் தேர்வு தேதி மீண்டும் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான ஜே.இ.இ நுழைவுத் தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு மீண்டும் மாற்றம்! – ஜே.இ.இ நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு முன்பு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து நீட் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

நீட் தேர்வு மீண்டும் மாற்றம்! – ஜே.இ.இ நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு

இந்த நிலையில் நீட் தேர்வு நடத்துவது இப்போதைக்கு சாத்தியமில்லை என அரசுக்கு தேசிய தேர்வு முகமை பரிந்துரைத்ததாக தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில் மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதிக்குள் நடைபெறும் எனவும் கூறியுள்ளார். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் பொக்ரியால் தெரிவித்தார்.