“காங்கிரஸ்லாம் இனி அவ்ளோ தான்… இனிமே எல்லாம் நாங்க தான்” – அமித் ஷா பரபரப்பு பேச்சு!

 

“காங்கிரஸ்லாம் இனி அவ்ளோ தான்… இனிமே எல்லாம் நாங்க தான்” – அமித் ஷா பரபரப்பு பேச்சு!

மத்திய உள்துறை அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்துக்காக ஒருநாள் பயணமாக நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். இன்று காலை புதுச்சேரி புறப்பட்டுச் சென்ற அமித் ஷா, காரைக்காலில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ”அரசியல் அனுபவத்தில் சொல்கிறேன் தேர்தலில், பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும். புதுச்சேரி மண் மகாகவி பாரதியார் வாழ்ந்த மிகவும் புனிதமான மண்.

“காங்கிரஸ்லாம் இனி அவ்ளோ தான்… இனிமே எல்லாம் நாங்க தான்” – அமித் ஷா பரபரப்பு பேச்சு!

பிரதமராக மோடி வந்தபின், நாடு முழுவதற்கும் புதுச்சேரியை மாதிரி மாநிலமாக மாற்ற வேண்டும் என விரும்பினார். இந்த மாநிலத்தின் முழுமையான வளர்ச்சிக்காக 115 திட்டங்களைச் செயல்படுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால், எங்களால்தான் புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ந்தது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது.

“காங்கிரஸ்லாம் இனி அவ்ளோ தான்… இனிமே எல்லாம் நாங்க தான்” – அமித் ஷா பரபரப்பு பேச்சு!

மக்களுக்குச் சேவை செய்யாமல் சோனியா குடும்பத்துக்குச் சேவை செய்யும் முதல்வராகவே இருந்தார். மத்திய அரசு வழங்கிய ரூ.1500 கோடி நிதியில் காந்தி குடும்பத்துக்குப் பங்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏராளமான பெரிய தலைவர்கள் பாஜகவில் சேர்ந்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி சிதைந்து வருகிறது. புதுச்சேரியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் சிதைந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் வாரிசு அரசியல் முறைதான்” என்றார்.