கொரானா கொட்டத்தை அடக்க ,நம்ம தோட்டத்துல இனி இதெல்லாம் வளர்க்கணும்.

 

கொரானா  கொட்டத்தை அடக்க ,நம்ம தோட்டத்துல இனி இதெல்லாம் வளர்க்கணும்.

வீட்டில் வளர்க்க ஏதுவான, இரவில் ஆக்சிஜன் உமிழும் தாவரங்களை இங்கே காணலாம்.

1 – ஆலிவேரா:

ஆரோக்கியத்தை விளைவிக்கும் தாவரங்களின் பட்டியலில் ஆலிவேரா முதலிடத்தில் உள்ளது. காற்றின் தூய்மையை அதிகரிக்கப் பயன்படுகிறது என நாசாவின் பட்டியலில் இடம்பெற்ற தாவரம். இதனை பராமரிக்க என்று எதுவும் செய்யத் தேவையில்லை. அத்துடன் அழகியலையும் வாரித் தருகிறது.

கொரானா  கொட்டத்தை அடக்க ,நம்ம தோட்டத்துல இனி இதெல்லாம் வளர்க்கணும்.

2 – பாம்பு தாவரம்:

இரவில் ஆக்சிஜனை வெளியிடும் முக்கிய தாவரம். அதே சமயம் கார்பன் டை ஆக்சைடை உட்கொள்கிறது. அதனால் இல்லத்தில் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்த இத்தாவரத்தை பயன்படுத்தலாம்.

3 – அரச மரம்:

பல்வேறு எதிர்மறை கருத்துக்கள் கூறப்பட்டாலும், அரச மரத்தில் ஏராளமான பலன்கள் உள்ளன. ஆக்சிஜன் வெளியிடுவது மட்டுமல்லாமல், சர்க்கரை நோய், மலச்சிக்கல் மற்றும் ஆஸ்துமாவிற்கு சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது.

4 – மல்லிகை:

அழகானது, பயன் தரத் தக்கது. படுக்கை அறையின் ஒருமூலையில் வைக்க ஏதுவானது. இரவில் ஆக்சிஜனை வெளியிடுவது மட்டுமல்லாமல், அறை முழுவதும் புத்துணர்ச்சி தரும் நிலையை ஏற்படுத்துகிறது.

5 – வேப்பிலை:

பல்வேறு மருத்துவக் குணங்கள் கொண்டது. இரவில் ஆக்சிஜனை வெளியிட்டு, காற்றை புதுப்பிக்கும் பணியை செய்கிறது. காலங்காலமாக வீடுகளில் வேப்ப மரம் வளர்ப்பதை பின்பற்றி வருகிறார்கள். இயற்கை பூச்சிக் கொல்லியாக பயன்படும் இதனை, வீட்டில் மையப்பகுதியில் வைத்திருப்பது ஒரு வழக்கமாகும்.

கொரானா  கொட்டத்தை அடக்க ,நம்ம தோட்டத்துல இனி இதெல்லாம் வளர்க்கணும்.

ஆக்சிஜென் கொடுக்கும் உணவுகள் :

6.மஞ்சள் :

மஞ்சள் அனைத்து வகையான தொற்றுகளிலிருந்தும் நம்மை பாதுக்காக்கும் தன்மை கொண்டது. இதில், ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ளது. தினமும் தூக்கச் செல்லும் முன், பாலில் மஞ்சள் சேர்த்து குடித்து வரலாம். மஞ்சளுடன் கிராம்பு, இலவங்கப்பட்டை, இஞ்சி, துளசி ஆகியவற்றை சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, தேநீர் போல அருந்தலாம். இது, நுரையீரலை வலுப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டுகிறது.

7.அத்திப் பழம் :

 வைட்டமின்-சி, வைட்டமின்-கே, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அத்தியில் உள்ளன. அத்தியை தொடர்ந்து சாப்பிட்டு வர, நுரையீரலை வலுபடுத்தும். இதய ஆரோக்கியத்திற்கும் உகந்ததாகும்.

8.துளசி :

துளசி இலையில் அதிக அளவு பொட்டாசியம், இரும்புச் சத்து, குளோரோஃபில் மெக்னீசியம், வைட்டமின் சி, கரோட்டின் ஆகிய சத்துகள் செறிந்து காணப்படுகின்றன. இவை, நுரையீரலை வலுவாக வைத்திருக்க உதவுகின்றன. தினமும் 5 இலைகளை மென்று சாப்பிட்டு வரலாம். துளசி இலைகளை சுடுதண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை தேநீர் போல அருந்தி பயன் பெறலாம்.