நுண்ணுயிரிகளை மண்ணுக்குள் அனுப்பும், தொற்று நோய் கால மூலிகைகள்

 

நுண்ணுயிரிகளை மண்ணுக்குள் அனுப்பும், தொற்று நோய் கால மூலிகைகள்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று, ஆக்சிஜன் பற்றாக்குறை என பல காரணிகள் நம்மை அச்சமடைய செய்து கொண்டிருந்தாலும், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்துவதில் நாம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம். தற்போதைய சூழலில், நம் உடலில் ஆக்சிஜன் இருப்பையும் உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நமது உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க, நுரையீரல் நன்றாக செயல்படுவது அவசியம். நுரையீரலில் நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜன் வடிகட்டப்பட்ட பின், உடலின் அனைத்து பகுதிகளையும் அடைகிறது. இதனால், நுரையீரலுக்கு சிறப்பு கவனம் செலுத்துவது அவசியமாகிறது.

நுண்ணுயிரிகளை மண்ணுக்குள் அனுப்பும், தொற்று நோய் கால மூலிகைகள்

துளசி:

மன அழுத்தம், நீரிழிவு, சுவாச சிக்கல்களை சரிசெய்யும். தக்காளி சாஸ், ஸ்பாகெட்டி அல்லது பிட்சாவில் சேர்த்து சாப்பிடலாம்.

பிரிஞ்சி இலை:

பூண்டு, வெங்காயம், காரட், குடை மிளகாயுடன் பிரிஞ்சி இலைகளை சேர்த்து சாப்பிடுவதால் மைக்ரேன் தலைவலி, அதிக ரத்த சர்க்கரை போன்றவற்றை சரிசெய்யலாம்.

கொத்தமல்லி:

கொஞ்சம் கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம் சேர்த்து சாப்பிடுவதால் முகப்பரு, நீரிழிவு சிக்கல்களை சரிசெய்யலாம். சமைக்காமல் சாப்பிடுவது நல்லது.

கறிவேப்பிலை:

மோருடன் கறிவேப்பிலை, கடுகு சேர்த்து சாப்பிடுவது ஃபுட் பாய்சன் ஏற்பட்டால் மருந்தாகச் செயல்படும்.

லெமன் கிராஸ்:

டீயுடன் சேர்த்து சாப்பிடலாம். உடல் சோர்வு, வலிகளில் இருந்து விடுதலை தரும்.

பார்ஸ்லி:

வாயுவையும் வயிற்று சிக்கல்களையும் சரிசெய்ய உதவுகிறது. எலும்பு, உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது.

ஓரிகானோ:

உலகின் தலைசிறந்த இயற்கை மருந்துகளில் இதுவும் ஒன்று. வலிகள், வயிறு – சிறுநீர் சிக்கல்கள், வீங்கிய சுரப்பிகள், பதற்றம், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் என அனைத்தையும் சரிசெய்கிறது.

புதினா:

வெள்ளரியுடன் சேர்த்து சாப்பிடும் புதினா சட்னியிலிருந்து அதன் குளிர்ச்சியை அறிந்து கொள்ளலாம்.

ரோஸ்மேரி: ரோஸ்மேரி ஞாபகத்திறனை மேம்படுத்தி, அல்ஸீமர் நோயை தடுக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஓமம்:

சுவாசச் சிக்கல்கள், சளி பிரச்சினைகளை சரிசெய்யும். டீயுடன் சேர்த்து குடிக்கலாம். பச்சை காய்கறிகளுடன், ஆலிவ் எண்ணெய், பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

மஞ்சள் :

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் நிறைந்துள்ளதால், அனைத்து வகையான
தொற்றுநோய்களிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும். தினமும் நீங்கள் தூக்கச் செல்லும் முன், மஞ்சள் பொடியை பாலில் கலந்து குடிக்கலாம். இதனுடன், நீங்கள் மஞ்சள், இலவங்கப்பட்டை, கிராம்பு, இஞ்சி மற்றும் துளசி ஆகியவற்றை கலந்து காபி தயாரித்து குடித்து வரலாம். இது, நுரையீரலை வலுவாக வைத்திருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது.

பூண்டு :

வெள்ளைப் பூண்டில் ஆண்டிபயாடிக், பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு பண்புகள் மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின்கள் போன்றவை செறிந்து காணப்படுகின்றன. இதனால், பூண்டினை சாப்பிட்டு வர, நுரையீரலை வலுவாக வைத்திருக்கலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 பூண்டு பற்களை சாப்பிடலாம். உங்கள் உடல் சூடாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், இரவில் பூண்டு சில பற்களையும், ஒரு கிராம்பையும் ஊறவைத்து, காலையில் அவற்றை உட்கொண்டு வர, குளிர்ச்சி அடையும்.