பெண்கள் இதை கொஞ்ச நாள் குடிச்சாலே ஒரு குழந்தையை கொஞ்சலாம்

 

பெண்கள் இதை கொஞ்ச நாள் குடிச்சாலே ஒரு குழந்தையை கொஞ்சலாம்

கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனை எதுவாக இருந்தாலும் தும்பை பூவை வெள்ளாட்டு பாலுடன் கலந்து காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் கர்ப்பப்பை நோய் குணமாகும். ஒரு மண்டலம் அளவு தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அதிக ரத்தபோக்கு பிரச்சனை இருப்பவர்கள் தும்பை இலையை சுத்தம் செய்து எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த போக்கு குறையும்.

பெண்கள் இதை கொஞ்ச நாள் குடிச்சாலே ஒரு குழந்தையை கொஞ்சலாம்

அதிக தாகம் எடுக்கும் கோடையில் காலை வேளையில் தும்பை பூவை கசக்கி சாறு பிழிந்து ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து அதே அளவு தேன் கலந்து குழைத்து சாப்பிட்டால் நாள் முழுக்க வறட்சி, தாகம், அசதி போன்றவை நீங்கும் என்கிறது சித்த மருத்துவம்.

தினமும் தலைக்கு குளிக்கும் ஆண்கள், அடிக்கடி தலைக்கு குளிக்கும் பெண்கள் தான் கபாலத்தில் நீர் கோர்வை பிரச்சனைக்கு உள்ளாவார்கள். இவர்கள் தும்பை இலையை நீர் விடாமல் அரைத்து, அந்த சாற்றை எடுத்து மூக்கு துவாரங்களில் இரண்டு அல்லது மூன்று சொட்டு உள்ளுக்குள் விட்டு அல்லது உறிஞ்சு கொள்ள வேண்டும். அரை மணி நேரத்தில் தலையில் இருக்கும் நீர் மொத்தமும் மூக்கின் வழியாக உறிஞ்சி வெளியேறும்.

தும்பைப் பூவையும், ஆடுதீண்டாப் பாலை விதையையும் அரைத்துக் கொடுத்துப் பசும் பால் பருகிவர ஆண்மை அதிகரிக்கும்.தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத் தனித்தனியே ஆறவைத்து உலர்த்திச் சூரணம் செய்து கொடுத்து வர இதயப் பலவீனம் நீங்கும். சுரத்திற்குப் பின் ஏற்பட்ட சோர்வு தீரும். பசி அதிகரிக்கும். காமாலை குணமாகும். பித்த மயக்கம், வாந்தி குணமாகும் தீரும்.தும்பை வேர், தைவேளை இலை, ஈர வெங்காயம் மூன்றையும் அரைத்து வைத்துக் கட்டப் பவுத்திரம் குணமாகும்