அடுத்தடுத்து சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்… கிடுக்குப்பிடி போடும் நீதிமன்றம்!

 

அடுத்தடுத்து சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்… கிடுக்குப்பிடி போடும் நீதிமன்றம்!

நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் விஸ்வநாதன் போட்டியிட்டு 11,900 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வேட்பு மனுவில் தகவல்களை மறைத்த நத்தம் விஸ்வநாதன் மீது நடவடிக்கை  எடுக்க கோரி, திண்டுக்கல்லைச் சேர்ந்த சபாபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், “நத்தம் விஸ்வநாதன் ரூ.4.75 கோடி வருமான வரி செலுத்தாதது தொடர்பாக வருமான வரி வழக்கு வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது. 

அடுத்தடுத்து சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்… கிடுக்குப்பிடி போடும் நீதிமன்றம்!

அதேபோல் ரூ.279 கோடி வரி செலுத்தாதது தொடர்பாக 201 ஆம் ஆண்டு  அவரது சொத்துகளை முடக்கம் செய்து வருமான வரி உத்தரவு பிறப்பித்தது. இந்த அனைத்து தகவல்களை நத்தம் விஸ்வநாதன் தனது வேட்புமனுவில் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். இதைச் சரிபார்க்காமல் தேர்தல் ஆணையம் விஸ்வநாதனை போட்டியிட அனுமதித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்… கிடுக்குப்பிடி போடும் நீதிமன்றம்!

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்வீவ் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில்,மனுதாரர் மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாகவும், இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தால் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க வேண்டும் எனவும், புகார் குறித்து சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு உரிய வாய்ப்பளித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டனர்.

அடுத்தடுத்து சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்… கிடுக்குப்பிடி போடும் நீதிமன்றம்!


இது போன்ற புகாரில் சம்பந்தப்பட்ட வர்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் என பார்க்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திறகு நீதிபதிகள் அறிவுறுத்தினர். முன்னதாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கும் இதுபோன்றதொரு வழக்கில் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது கவனித்தக்கது.