கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார் நடராஜன்

 

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார் நடராஜன்

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்திவருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார் நடராஜன்

கொரோனாவை எதிர்த்து போராட ஒரே வழி கொரோனா தடுப்பூசி தான் என்பதால் அதனை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. தடுப்பூசி குறித்த நம்பிக்கையை ஏற்படுத்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா, விளையாட்டு துறை பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இதுகுறித்து ட்விட்டரி பதிவிட்டுள்ள அவர், “இன்று காலை நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்யும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.