காங்கிரஸ் கொள்கையும், தலைவர்களும் இல்லாத கட்சி… பா.ஜ.க. அமைச்சர் கிண்டல்

 

காங்கிரஸ் கொள்கையும், தலைவர்களும் இல்லாத கட்சி… பா.ஜ.க. அமைச்சர் கிண்டல்

காங்கிரஸ் கொள்கையும், தலைவர்களும் இல்லாத கட்சி என மத்திய பிரதேச பா.ஜ.க. அமைச்சர் கிண்டல் அடித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில உள்துறை அமைச்சராக இருப்பவர் நரோட்டம் மிஸ்ரா. அவர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது; காங்கிரசுக்கு சரியான கொள்கை அல்லது நோக்கம் அல்லது கட்சியில் தலைவர்களோ கிடையாது.

காங்கிரஸ் கொள்கையும், தலைவர்களும் இல்லாத கட்சி… பா.ஜ.க. அமைச்சர் கிண்டல்
காங்கிரஸ்


அதனால் அந்த கட்சி தலைவர்கள் காங்கிரஸ் மூழ்கும் கப்பல் என்பதை ஒப்புக்கொள்கின்றனர். கமல் நாத் டிவிட்டரை தாண்டி செல்லமாட்டார். கோவிட்-19ஐ குறைப்பதில் அச்சம் இருப்பதாக நான் ஒப்புக்கொள்கிறேன். அவர் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருவதை நான் பாராட்டுகிறேன். கூட்டத்துக்காக பல்வேறு மாநிலங்களுக்கு அவர் செல்ல முடியும் ஆனால் கட்சி (காங்கிரஸ்) நிகழ்ச்சிகளை தவிர்ப்பார்.

காங்கிரஸ் கொள்கையும், தலைவர்களும் இல்லாத கட்சி… பா.ஜ.க. அமைச்சர் கிண்டல்
கமல் நாத்

மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதற்கு மத்தியில், இலவச மருந்து, ஆக்சிஜன் படுக்கை, தனிமைப்படுத்துதல் வார்டுகள் மற்றும் இதர தேவையான வசதிகளை அரசு வழங்குகிறது. நாம் நம்மை வைரஸிலிருந்து பாதுகாத்து கொள்வது அவசியம், நாம் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது முடியும். முன்எச்சரிக்கை என்பது கொரோனா வைரஸுக்கு சிகிச்சையாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.