ராகுல் காந்திக்கு உருளைகிழங்கு தரைக்கு மேலே அல்லது கீழே வளர்கிறதா என்பது கூட தெரியாது.. பா.ஜ.க. நக்கல்

 

ராகுல் காந்திக்கு உருளைகிழங்கு தரைக்கு மேலே அல்லது கீழே வளர்கிறதா என்பது கூட தெரியாது.. பா.ஜ.க. நக்கல்

உருளைக்கிழங்கு தரைக்கு மேலே அல்லது கீழே வளர்கிறதா என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது என்று மத்திய பிரதேச பா.ஜ.க. அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கிண்டல் செய்தார்.

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் மத்திய அரசின் வேளண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸை தாக்கினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

ராகுல் காந்திக்கு உருளைகிழங்கு தரைக்கு மேலே அல்லது கீழே வளர்கிறதா என்பது கூட தெரியாது.. பா.ஜ.க. நக்கல்
நரோட்டம் மிஸ்ரா

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத் ஜி, 15 மாதங்களில் (கமல் நாத் முதல்வராக இருந்த காலம்) ஒரு விவசாயின் பண்ணைகளுக்கு சென்ற கிடையாது. டிராக்டரில் சவாரி செய்வார். டிராக்டரில் சோபா அமைத்து ஓட்டிய ராகுல் காந்திக்கு உருளைக்கிழங்கு தரையின் மேலே அல்லது கீழே விளைகிறதா என்பது கூட தெரியாது.

ராகுல் காந்திக்கு உருளைகிழங்கு தரைக்கு மேலே அல்லது கீழே வளர்கிறதா என்பது கூட தெரியாது.. பா.ஜ.க. நக்கல்
கமல் நாத்

இந்த பண்ணை சட்டங்களில் கருப்பு என்றால் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த துக்டே துக்டே (நாட்டை துண்டாட நினைப்பவர்கள்) கும்பல்தான் விவசாயிகளை தூண்டுகிறது மற்றும் தவறாக வழி நடத்துகிறது. இதுவரை கருப்பு சட்டங்களை யாராலும் விளக்க முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.