கொரோனா தடுப்பூசி: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

 

கொரோனா தடுப்பூசி: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு இந்தியா கண்டுபிடித்த தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினை அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது. இந்த தடுப்பூசிகளை குழந்தைகளுக்கும் செலுத்தலாம் என்று கூறியிருந்தது. அதன் படி, உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாராகி விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார். இதுவரை கொரோனாவுடன் போராடிய முன் களப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனிடையே இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஒத்திகை பணிகள் நடைபெற்றன.

கொரோனா தடுப்பூசி: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்த நிலையில், ஜனவரி 13ம் தேதி முதல் தடுப்பூசி மருந்துகளை விநியோகம் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. கர்னல், மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் தடுப்பூசி சேமிப்பு மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் வரும் திங்கட்கிழமை(11 ஆம் தேதி) பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்ததன் படி, நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.