தாராபுரம், மதுரையில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் ஒலிக்கப்போகும் மோடியின் குரல்!

 

தாராபுரம், மதுரையில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் ஒலிக்கப்போகும் மோடியின் குரல்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆங்காங்கே அரசியல் தலைவர்கள் அதிரடியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. பிரச்சாரத்தில் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசி மக்களின் வாக்குகளை கவர்ந்து வருகின்றன. அதே வேலை அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் தேசிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது தமிழகம் வந்து மக்களை ஈர்த்துவருகின்றனர். அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜகவின் முக்கிய தலைவர் அமித்ஷாவின் வருகையைத் தொடர்ந்து, பிரதமர் மோடி கடந்த 14 ஆம் தேதி சென்னைக்கு வருகை தந்தார்.

தாராபுரம், மதுரையில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் ஒலிக்கப்போகும் மோடியின் குரல்!

இந்த சூழலில் தேர்தல் பரப்புரைக்காக வரும் மார்ச் 30ம் தேதி பிரதமர் மோடி புதுச்சேரி வருகை தர இருக்கிறார். மேலும் அங்கு நடைபேறும் பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றிய பின் தாராபுரத்திலும், ஏப்ரல் 2-ம் தேதி மதுரையிலும் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். தாராபுரம், மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமியும் பங்கேற்கவிருக்கிறார்.