பா.ஜ.க.வுக்கு எதிராக நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரே வாய்ப்பு காங்கிரஸ் மட்டும்தான்… 2024ல் காங்கிரஸ் ஆட்சி.. நானா படோல் நம்பிக்கை

 

பா.ஜ.க.வுக்கு எதிராக நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரே வாய்ப்பு காங்கிரஸ் மட்டும்தான்… 2024ல் காங்கிரஸ் ஆட்சி.. நானா படோல் நம்பிக்கை

பா.ஜ.க.வுக்கு எதிராக நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரே வாய்ப்பு காங்கிரஸ் மட்டும்தான் என்றும் 2024ல் நாட்டில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் அரசாங்கம் அமைக்கப்படும் என்று நானா படோல் நம்பிக்கை தெரிவித்தார்.

மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாங்கள் யாருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை. நாங்கள் எங்கள் கட்சியை மாநிலத்தில் முதலிடத்துக்கு கொண்டு வருவதற்கு மட்டுமே செயல்படுகிறோம். மகாராஷ்டிராவின் முக்கிய கட்சிகளில் காங்கிரஸ் ஒன்றாகும். இது மக்களிடமிருந்து பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

பா.ஜ.க.வுக்கு எதிராக நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரே வாய்ப்பு காங்கிரஸ் மட்டும்தான்… 2024ல் காங்கிரஸ் ஆட்சி.. நானா படோல் நம்பிக்கை
நானா படோல்

கட்சியுடன் தங்களை அடையாளம் காண மக்கள் முன்வருகின்றனர். கட்சியில் மக்களின் நம்பிக்கை வளர்ந்து வருகிறது. கட்சியின் வலிமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாங்கள் 2014ல் ஏமாற்றப்பட்டோம். நாங்கள் தனியாக தேர்தலில் போட்டியிட வேண்டியது இருக்கும்.எனவே நாங்கள் முன்கூட்டியே தயாராகி வருகிறோம். பா.ஜ.க.வுக்கு எதிராக நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரே வாய்ப்பு காங்கிரஸ் மட்டும்தான். 2024ம் ஆண்டில் ராகுல் காந்தி தலைமையில் நாட்டில் காங்கிரஸ் காங்கிரஸ் அரசாங்கம் அமைக்கப்படும்.

பா.ஜ.க.வுக்கு எதிராக நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரே வாய்ப்பு காங்கிரஸ் மட்டும்தான்… 2024ல் காங்கிரஸ் ஆட்சி.. நானா படோல் நம்பிக்கை
பா.ஜ.க.

நான் ஒரு சிறிய நபர். பவார் சாஹிப் எங்கள் மூத்த தலைவர். அவர் என்னை மிகவும் நேசிக்கிறார். இந்த அன்பு எப்போதும் இருக்கும். மகாராஷ்டிரா காங்கிரஸ் பொறுப்பாளர் மற்றும் எங்கள் கட்சியின் முக்கிய தலைவர் அசோக் சவான் ஆகியோர் சரத் பவாரை சந்தித்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓ.பி.சி.) இடஒதுக்கீடு பிரச்சினை குறித்து பேசினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.