மூத்த தலைவரான நல்லகண்ணுக்கு கொரோனா இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

 

மூத்த தலைவரான நல்லகண்ணுக்கு கொரோனா இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்ட பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து சிலர் மீண்டு வரும் நிலையில், பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால், அவர் சென்னை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கும் கொரோனா பாதிப்பு இருக்குமோ என சந்தேகம் எழுந்தது.

மூத்த தலைவரான நல்லகண்ணுக்கு கொரோனா இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுக்கு கொரோனா இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நல்லகண்ணுக்கு கொரோனா இல்லை என்றும் அவர் 5 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்புவார் என்றும் கூறினார். மேலும், பாடகர் எஸ்.பிபியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் வசந்த குமார் எம்.பிக்கு தீவிர சிகிசக அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.