கோவை மாவட்ட ஆட்சியராக நாகராஜன் பொறுப்பேற்பு!

 

கோவை மாவட்ட ஆட்சியராக நாகராஜன் பொறுப்பேற்பு!

கோவை

கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நாகராஜன் ஐ.ஏ.எஸ்., இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ராசாமணி மற்றும் கோவை மாநகர காவல் ஆணையராக இருந்த சுமித் சரண் ஆகியோரை நேற்று தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றம் செய்து, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

கோவை மாவட்ட ஆட்சியராக நாகராஜன் பொறுப்பேற்பு!

பல்வேறு தரப்பில் வந்த தகவல்களின் அடிப்படையில் நடந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறிய ஆணையம், புதிய மாவட்ட ஆட்சியராக நாகராஜன் ஐ.ஏ.எஸ்-ஐ நியமித்தது. மேலும், இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்து இருந்தது.

இதன்படி, இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நாகராஜன், முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டு ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.