கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா

 

கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா

நாகை

மின் வாரிய தலைவரின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்து, நாகையில் இன்று தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. நாகை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,

கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா

நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகள் குறித்து பேச மறுத்து வரும் மின்வாரிய தலைவர் பிரதீப் யாதவின் செயல்பாட்டை

கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா

கண்டித்தும், மின்வாரிய ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். மேலும், தமிழகத்தில் உள்ள துணை மின்நிலையங்களை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்தும், மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆரம்ப நிலை பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.