சேலம் தனியார் விடுதியில் திரைப்பட தயாரிப்பாளர் மர்ம மரணம் – போலீசார் விசாரணை!

 

சேலம் தனியார் விடுதியில் திரைப்பட தயாரிப்பாளர் மர்ம மரணம் – போலீசார் விசாரணை!

சேலம்

சேலம் தனியார் தங்கும் விடுதியில் திரைப்பட தயாரிப்பாளர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன். சினிமா தயாரிப்பாளர். இவர் கடந்த 27ஆம் தேதி அன்று சேலம் டவுன் ரயில் நிலையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு ஜெயசீலன், தனது அறைக்கு சென்ற நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை. சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் ஜன்னல் வழியே பார்த்தபோது, ஜெயசீலன் படுக்கையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார்.

சேலம் தனியார் விடுதியில் திரைப்பட தயாரிப்பாளர் மர்ம மரணம் – போலீசார் விசாரணை!

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜெயசீலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் ஜெயசீலன், படத் தயாரிப்புக்காக திருப்பூரை சேர்ந்த சௌந்தரராஜன் என்பவரிடம் ரூ.20 லட்சம் கடன் வாங்கி இருந்ததும், அதனை திருப்பி தராமல் இருந்து வந்ததும் தெரியவந்தது.

இதனால் அவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் விடுதியில் திரைப்பட தயாரிப்பாளர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.