பூந்தமல்லி தனியார் ஓட்டலில் கேரளாவை சேர்ந்த நபர் மர்ம மரணம் – போலீசார் விசாரணை

 

பூந்தமல்லி தனியார் ஓட்டலில் கேரளாவை சேர்ந்த நபர் மர்ம மரணம் – போலீசார் விசாரணை

சென்னை

பூந்தமல்லி அருகே தனியார் ஓட்டல் அறையில் கேரள மாநிலத்தை சேர்ந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பூந்தமல்லி தனியார் ஓட்டலில் கேரளாவை சேர்ந்த நபர் மர்ம மரணம் – போலீசார் விசாரணை

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சாஜின்(40). வேலை விஷயமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த இவர், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அறைக்குள் சென்ற அவர், மீண்டும் அறையிலிருந்து வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்து ஓட்டல் ஊழியர்கள் அறை கதவை தட்டியும், அவர் திறக்காததால் நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பூந்தமல்லி தனியார் ஓட்டலில் கேரளாவை சேர்ந்த நபர் மர்ம மரணம் – போலீசார் விசாரணை

போலீசார் ஓட்டல் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வாயில் நுரை தள்ளியபடி நிர்வாண நிலையில் சாஜின் இறந்து கிடந்தார். இதனை தொடர்ந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடைசியாக அவரது அறைக்கு ஒரு பெண் வந்து சென்றிருப்பது தெரியவந்தது. மேலும், அவர் நிர்வாணமாக படுக்கையில் இறந்து இருப்பதால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.