சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவில் இன்று முதல் திறப்பு!

 

சென்னை மயிலாப்பூர்  சாய்பாபா கோவில் இன்று முதல் திறப்பு!

சென்னை மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவில் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர்  சாய்பாபா கோவில் இன்று முதல் திறப்பு!

கொரோனா காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் மோசமடைகிறது என்பதை உணர்ந்த தமிழக அரசு ஊரடங்கில் தாராள தளர்வுகளை அளித்தது. இதன் எதிரொலியாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் தமிழகத்தில் திறக்கப்பட்டது. கோயில் நிர்வாகங்கள் வழிக்காட்டு நெறிமுறைகளுடன் வழிப்பாட்டு தலங்களை பாதுகாப்பாக திறக்கலாம் என அரசு அறிவித்தது. இதனால் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பல்வேறு கோயில்கள் திறக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூர்  சாய்பாபா கோவில் இன்று முதல் திறப்பு!

இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவில் இன்று திறக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் திறக்கலாம் என்று அரசு அறிவித்தப்பிறகும் நீண்ட நாட்களாக கோவில் திறக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.