புதிய வேளாண் திட்டங்களுக்கு ஆதரவு! விவசாயிகளின் முதுகில் குத்துவதாக முத்தரசன் கடும் தாக்கு!

 

புதிய வேளாண் திட்டங்களுக்கு ஆதரவு! விவசாயிகளின் முதுகில் குத்துவதாக முத்தரசன் கடும் தாக்கு!

வேளாண் பொருள் விற்பனை ஒழுங்குமுறை சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் சேவையில் திருத்த சட்டம் உள்ளிட்ட மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மூன்று சட்டங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் இச்சட்டங்களுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் திட்டங்களுக்கு ஆதரவு! விவசாயிகளின் முதுகில் குத்துவதாக முத்தரசன் கடும் தாக்கு!

இந்த நிலையில் நாகையில் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ‘’இந்த சட்டம் நிறைவேற்ற பட்டால், வியாபாரிகளுக்கு குறைந்தபட்சம் நியாய விலை கிடைக்காது, பெரும் வியாபாரிகள் மட்டுமே வேளாண் பொருட்களை இருப்பு வைத்து கள்ள மார்கெட்டில் விற்பனை செய்யமுடியும் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

மேலும், தமிழக முதல்வர் உண்மையான விவசாயியாக இருந்தால், அதிமுக 9 மாநிலங்களவை உறுப்பினர்களும் இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனவும், மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் விவசாயிகளின் முதுகில் குத்திய துரோகிகள் ஆவீர்கள் என்று கடுமையாக சாடினார்.

புதிய வேளாண் திட்டங்களுக்கு ஆதரவு! விவசாயிகளின் முதுகில் குத்துவதாக முத்தரசன் கடும் தாக்கு!

இந்த சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட போவதாக அறிவித்த முத்தரசன், நாளை திமுக தலைமையில், மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது என்றும் கூறினார்.

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திமுக தலைமையிலான தங்களது மெகா கூட்டணி தொடரும் என்றும், தங்கள் கூட்டணி பலமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.