கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் படுகொலை… மனைவி, ஆண் நண்பர் கைது!

 

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் படுகொலை… மனைவி, ஆண் நண்பர் கைது!

ஈரோடு

ஈரோட்டில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று விட்டு, இயற்கை மரணம் என நாடகமாடிய மனைவியை போலீசார் கைதுசெய்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அடுத்த காவிரிபுரம் தெலுங்கனூரை சேர்ந்தவர் குழந்தைவேல் (35). இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குழந்தைவேலு ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த ஈங்கூர் நல்லமுத்தாம் பாளையத்தில் குடும்பத்துடன் தங்கி, வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இதனிடையே, உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 28ஆம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இருந்து கிடந்தார்.

தொடர்ந்து, இறுதிச்சடங்கிற்காக அவரது சொந்த ஊருக்கு உடலை கொண்டு சென்றபோது, அவரது கழுத்தில் காயங்கள் இருப்பதை கண்ட அவரது அண்ணன் மாதேஷ், சென்னிமலை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனலட்சுமி மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் தனலட்சுமியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில், அவர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றது தெரிய வந்துள்ளது.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் படுகொலை… மனைவி, ஆண் நண்பர் கைது!

இது குறித்து போலீசார் கூறியதாவது, ஊரடங்கால் வேலை இன்றி தவித்த குழந்தைவேல், தனது வண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார். அப்போது, நுங்கம்பாடியை சேர்ந்த கவியரசு (35) என்பவர் பழக்கம் ஏற்பட்டு, நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டதால், குழந்தை வேலுவை பார்க்க கவியரசு அடிக்கடி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும், தனலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதனால், கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள குழந்தைவேலுவை கொல்ல முடிவெடுத்து, கடந்த 28ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை வேலுவை கவியரசு, தனலட்சுமி நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கியும், தொடர்ந்து தலையணையை கொண்டு முகத்தில் அமுக்கியும் கொன்றனர். பின்னர், ஒன்றும் நடக்காதது போல் கணவர் உடல்நலமின்றி உயிரிழந்ததாக நாடகம் ஆடியுள்ளார்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் படுகொலை… மனைவி, ஆண் நண்பர் கைது!

இதனையடுத்து, தனலட்சுமி, அவரது ஆண் நண்பர் கவியரசுவை கைதுசெய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், கவியரசு கோபி மாவட்ட சிறையிலும், தனலட்சுமி கோவை பெண்கள் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.