மதுபோதையில் தகராறு செய்த கூலி தொழிலாளி வெட்டிக்கொலை… உறவினர் வெறிச்செயல்!

 

மதுபோதையில் தகராறு செய்த கூலி தொழிலாளி வெட்டிக்கொலை… உறவினர் வெறிச்செயல்!

தென்காசி

சங்கரன்கோவில் அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளியை வெட்டிக் கொன்ற உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கண்டிகைபேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமர். இவரது மகன் முத்துப்பாண்டி (35). கூலி தொழிலாளி. கண்டிகைப்பேரியை அருகே உள்ள களப்பாகுளம் பகுதியை சேர்ந்தவர் மரியராஜ். உறவினர்களான இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில், நேற்று மாலை இருவரும் சீவலராயனேந்தல் சாலையின் அருகே அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.

மதுபோதையில் தகராறு செய்த கூலி தொழிலாளி வெட்டிக்கொலை… உறவினர் வெறிச்செயல்!

அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த மரியராஜ் தான் வைத்திருந்த அரிவாளால் முத்துப்பாண்டியை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து, மரியராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சங்கரன்கோவில் தாலுகா போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

மேலும், கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மரியராஜை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் கிராமத்தினிரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.