இளைஞரின் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாகக் கொலை: மர்ம கும்பலின் வெறிச்செயல்!

 

இளைஞரின் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாகக் கொலை: மர்ம கும்பலின் வெறிச்செயல்!

புதுச்சேரி அருகே இளைஞரின் தலையில் கல்லைப்போட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அருகே உள்ள கணுவாய்பேட்டை என்னும் பகுதியை சேர்ந்த ராம்(26) என்ற இளைஞர், அப்பகுதியில் இருக்கும் மதுக்கடை ஒன்றில் கேஷியராக பணியாற்றி வந்தார். நேற்று வழக்கம் போல பணிக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ராமை வழிமறித்த மர்ம கும்பல் அவரின் தலையில் கல்லைப்போட்டுக் கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், ராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இளைஞரின் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாகக் கொலை: மர்ம கும்பலின் வெறிச்செயல்!

இதனைத்தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவரை மர்ம கும்பல் கல்லைப்போட்டு கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர். இதனிடையே இந்த கொலை பற்றிய தகவல் போலீசாருக்கு கிடைத்திருக்கிறது.

இளைஞரின் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாகக் கொலை: மர்ம கும்பலின் வெறிச்செயல்!

அதாவது சில ஆண்டுகளுக்கு முன்னர் ராமின் சகோதரர் கொலை செய்யப்பட்டதாகவும், கொலை செய்தவர்களை பழி வாங்க முயன்ற ராம் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் ராமை கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த கோணத்தில் விசாரணையை போலீசார் தொடர்ந்து வருகின்றனர். மேலும், 3 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.