தானா சேர்ந்த கூட்டம் பட பாணியில் நூதன கொள்ளை!

 

தானா சேர்ந்த கூட்டம் பட பாணியில் நூதன கொள்ளை!

சூர்யா நடிப்பில் வெளியான படம், தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தில் சூர்யாவும் அவரது கூட்டமும் சிபிஐ அதிகாரிகளாக வேஷமிட்டு கொள்ளையில் ஈடுபடுவர். அதேபோல் ஒரு சம்பவம் மஹாராஷ்டிராவில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வைல் பார்லே பகுதியில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது.

தானா சேர்ந்த கூட்டம் பட பாணியில் நூதன கொள்ளை!

கடந்த புதன்கிழமை (17.02.2021) சிலர் போலீஸ் அதிகாரிகளாக வேஷமிட்டு இந்த ஹோட்டலில் சோதனை நடத்தினர். சோதனையின்போது 12 கோடி ரூபாயைப் கொள்ளையடித்து சென்று விட்டனர். இரண்டு நாட்களாக, இந்த ஹோட்டல் குரூப் விசாரித்ததில், அவர்கள் போலி அதிகாரிகள் என தெரியவந்தது. இதனையடுத்து ஹோட்டல் நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்தது. அதனைத் தொடர்ந்து ஹோட்டலில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்து, போலி அதிகாரிகளை மும்பை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக, 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.