“இரவு பணிக்கு வரும்போதெல்லாம் உறவு கொள்வார்” -டாக்டர் மீது புகாரளித்த பெண் ஊழியர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு தனியார் ஹாஸ்ப்பிட்டலில் பணி புரியும் ஒரு பெண்ணை அந்த ஹாஸ்ப்பிட்டலில் பணிபுரியும் ஒரு டாக்டர் பலாத்காரம் செய்ததாக புகாரளித்துள்ளார்
மும்பையில் பால்கர் மாவட்டத்தில் உள்ள தஹானு பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது .இங்கு பல பிரபலங்கள் சிகிச்சைக்கு வருவார்கள் .இந்நிலையில் அங்கு 30 வயதான டாக்டர் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துள்ளார் .அதே மருத்துவமனையில் அவருக்கு உதவியாக ஒரு 30 வயதான பெண்ணொருவர் பணியாற்றியுள்ளார் .அதனால் தன்னோடு பணியாற்றும அந்த பெண் மீது அந்த டாக்டர் மோக வலை வீசியுள்ளார் .
அதனால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார் .அதை நம்பிய அந்த பெண்ணும் அந்த டாக்டரிடம் பழகியுள்ளார் .அதன்பிறகு அந்த டாக்டர் அந்த பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளாக பலமுறை பலாத்காரம் செய்ததாக அவர் கூறியுள்ளார் .மேலும் அவர் வேண்டுமென்றே இரவுப்பணிக்கு வருவாராம் .அப்போதெல்லாம் பலமுறை உறவு கொண்டதாக அவர் கூறியுள்ளார் .இதனால் அந்த டாக்டரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்ட போது அதற்கு அவர் மறுத்துள்ளார் .மேலும் தனக்குண்டான கருவை தன் விருப்பத்திற்கு எதிராக கருக்கலைப்பு செய்யும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அவர் கூறினார். அவர் அவ்வாறு செய்ய மறுத்தால் தங்களது படுக்கையறை வீடியோக்களை பகிரங்கப்படுத்துவதாக அவர் மிரட்டினார்.இதனால் அந்த பெண் அவர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் .பொலிஸார் வழக்கு பதிவு செய்து அந்த டாக்டரிடம் விசாரித்து வருகிறார்கள் .