சீனியர் சிட்டிசன்களை சிக்க வைக்கும் ஆண்ட்டிகள் !-கல்யாணம் செய்து கொள்வதாக நடிப்பார்கள் -பணம் ,நகையோடு ஓடி விடுவார்கள்..

 

சீனியர் சிட்டிசன்களை சிக்க வைக்கும் ஆண்ட்டிகள் !-கல்யாணம் செய்து கொள்வதாக நடிப்பார்கள் -பணம் ,நகையோடு ஓடி விடுவார்கள்..

மும்பையில் போரிவ்லி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மிகப்பெரிய கோடீஸ்வரரான அந்த 70 வயது சீனியர் சிட்டிசனுக்கு மனைவி இறந்து விட்டார் .அதனால் அவருக்கு பணம் ,நகை .சொத்து இருந்தும் தனிமை வாட்டியது .அதனால் அவரின் நண்பரின் ஆலோசனையின் பேரில் மறுமணம் செய்து கொள்ள முடிவெடுத்து ,சமூக ஊடகத்தில் விளம்பரமும் தந்தார் .

சீனியர் சிட்டிசன்களை சிக்க வைக்கும் ஆண்ட்டிகள் !-கல்யாணம் செய்து கொள்வதாக நடிப்பார்கள் -பணம் ,நகையோடு ஓடி விடுவார்கள்..அந்த விளம்பரத்தை பார்த்து ஒரு 21 வயது பெண்ணுக்கு தாயான விவகாரத்து ஆன ஒரு பெண் அவரை கல்யாணம் செய்து கொள்வதாகவும் ,கடைசி காலத்தில் கண் கலங்காமல் அவரை பார்த்துக்கொள்வதாகவும் அன்பாக பேசி ,தன்னுடைய குடும்பத்தோடு அவரை பார்க்க வந்தனர் .அந்த பெண்ணை பார்த்ததும் அந்த பெரியவருக்கு பிடித்துப்போக ,உடனே அவர்கள் 30 நாட்களில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர் .

சீனியர் சிட்டிசன்களை சிக்க வைக்கும் ஆண்ட்டிகள் !-கல்யாணம் செய்து கொள்வதாக நடிப்பார்கள் -பணம் ,நகையோடு ஓடி விடுவார்கள்..இதற்கிடையில் அவர்களை நம்பி அந்த பெரியவர் தன்னுடைய நகை பெட்டி ,பணப்பெட்டி சாவி மற்றும் வீட்டு சாவியையெல்லாம் கொடுத்து விட்டார் .பிறகு அவர்கள் ஜாலியாக ஜெய்ப்பூருக்கு டூர் சென்றார்கள் .
இரண்டு நாள் டூர் முடிந்து அவர்களை ஜெய்ப்பூரில் விட்டு விட்டு பெரியவர் மட்டும் கல்யாண ஏற்பாடு செய்ய மும்பை திரும்பினார் .

சீனியர் சிட்டிசன்களை சிக்க வைக்கும் ஆண்ட்டிகள் !-கல்யாணம் செய்து கொள்வதாக நடிப்பார்கள் -பணம் ,நகையோடு ஓடி விடுவார்கள்..மும்பையில் தன்னுடைய வீட்டுக்கு வந்த பெரியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது .ஆம் ,அவர் வீட்டிலிருந்த நகை ,பணம் எல்லாம் திருடு போயிருந்தது .பிறகு சந்தேகப்பட்டு பெரியவர் ஜெய்ப்பூரிலிருக்கும் தன்னுடைய வருங்கால மனைவியை பார்க்க போன போது அவரையும் அவரின் குடும்பத்தினர் யாரையும் காணவில்லை .இதனால் அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது .பிறகு சிகிச்சையெடுத்துக்கொண்டு உடல்நிலை தேரியதும் அவரை ஏமாற்றி நகை பணத்தோடு ஓடிய கும்பல் மீது போலீசில் புகார் தந்தார் .