இப்படியா நடத்துவது? கை தட்டிய அரசே கை விரிக்கலாமா?… எம்.பி சு.வெங்கடேசன் காட்டம்!

 

இப்படியா நடத்துவது? கை தட்டிய அரசே கை விரிக்கலாமா?… எம்.பி சு.வெங்கடேசன் காட்டம்!

கொரோனாவால் உயிரிழக்கும் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் காப்பீடு தொகை திட்டம் காலாவதியானது குறித்து எம்.பி சு.வெங்கடேசன் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருக்கு கடித எழுதியிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கோவிட பேரிடரை எதிர்கொள்ளும் பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உயிரிழந்த முன்வரிசை பணியாளர்களுக்கு வழங்கி வந்த 50 லட்சம் காப்பீடு திட்டம் காலாவதியாகி 27 நாட்கள் ஆகிவிட்டன என்கின்ற அதிர்ச்சியான செய்தியை எப்படி ஏற்றுக் கொள்வது?. அரசு மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கான காப்பீடாகும் இது.

இப்படியா நடத்துவது? கை தட்டிய அரசே கை விரிக்கலாமா?… எம்.பி சு.வெங்கடேசன் காட்டம்!

கோவிட் இரண்டாவது அலை இந்தியா முழுக்க வீசிக் கொண்டிருக்கும் வேளையில் முன்வரிசை போராளிகளை இப்படியா நடத்துவது? மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் திருமிகு ராஜேஷ் பூஷன் அவர்களின் 24.3.2021 தேதியிட்ட மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கான கடிதத்தில் 24.3.2021 அன்று நள்ளிரவு வரையிலான உரிமை கோரல்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும் அதற்கான உரிமை கோரலை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் 24.03.2021 என்றும் குறிப்பிட்டுள்ளார். அப்படி எனில் 24ஆம் தேதி நள்ளிரவுக்குப் பின் இழப்பை சந்தித்துள்ள விலைமதிப்பற்ற உயிர்களுக்கு என்ன பதில்?.

இப்படியா நடத்துவது? கை தட்டிய அரசே கை விரிக்கலாமா?… எம்.பி சு.வெங்கடேசன் காட்டம்!

அவர்களை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு என்ன ஆறுதல் தரப்போகிறோம்? இன்னும் வீரியத்தோடு தாக்கிக் கொண்டிருக்கும் இரண்டாவது அலையை எதிர்த்து முன் வரிசையில் நிற்கும் மருத்துவர், செவிலியர் ஊழியருக்கு என்ன நம்பிக்கை தர போகிறோம்? இன்று நான் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அக்கடிதத்தில் மூன்று முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கிறேன்.

இக்காப்பீட்டு திட்டம் எவ்வித காலதாமதமின்றி உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டும். 24.03.2021 நள்ளிரவுக்கு பின்னர் உயிரிழந்தவர்களுக்கு காப்பீட்டு பயன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான அறிவிப்பு உடனடியாக வெளியிட வேண்டும். இத்திட்டம் நடைமுறையாகும் போது தகுதியுள்ள உரிமங்கள் பல இழுத்தடிக்கப்படுவதாக அறிய வருகிறேன். ஒவ்வொருவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தெளிவான வழிகாட்டல், இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் அனைத்து மாநில யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.