கர்ப்பிணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை தர வேண்டும் – எம்.பி சு.வெங்கடேசன் வேண்டுகோள்!

 

கர்ப்பிணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை தர வேண்டும் – எம்.பி சு.வெங்கடேசன் வேண்டுகோள்!

தடுப்பூசி செலுத்துவதில் கர்ப்பிணி பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென எம்.பி சு.வெங்கடேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தடுப்பூசிகளை அனைவருக்கும் செலுத்தி மூன்றாம் அலை பெருமளவில் மக்களை தாக்காமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நாடே நகர்ந்து கொண்டிருக்க கர்ப்பிணி பெண்களின் நலன் குறித்து நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் எப்போதுமே தனி கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள்.

கர்ப்பிணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை தர வேண்டும் – எம்.பி சு.வெங்கடேசன் வேண்டுகோள்!

கர்ப்பிணி பெண்கள் யார் தொற்றுக்கு ஆட்படுவார்கள் அல்லது பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதை கணிப்பது கடினம். ஆகையால் அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம். இப்போது நம்மிடையே இருக்கும் தடுப்பூசிகள் கர்ப்பிணிப் பெண்களில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கான தெளிவான வரையறை இதுவரை நம்மிடம் இல்லாமல் இருந்தது. இருப்பினும் சமீபத்திய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தடுப்பூசிகளை பயன்படுத்துவது பாதுகாப்பானது என அறிவுறுத்தியுள்ளது.

வாய்ப்பு இருப்பின் mRNA வகை பிரிவைச் சேர்ந்த ஃபைசர் தடுப்பூசிகளை வாங்கி கர்ப்பிணிகளுக்கு கொடுப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம். ஃபைசர் தடுப்பூசி கர்ப்பிணிப் பெண்களில் பாதுகாப்பானது என பல ஆதாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் கர்ப்பிணிகள் அரசாங்கத்தில் பதிவு செய்கின்றனர். அவர்களை கணக்கெடுத்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் நடு மூன்று மாதங்கள், கடைசி மூன்று மாதங்களில் பெரும்பாலான கர்ப்பிணிகள் பாதிக்கப்படுவதை பார்க்க முடிகிறது. எனவே முதல் மூன்று மாதங்களில் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு முயலலாம்.

கர்ப்பிணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை தர வேண்டும் – எம்.பி சு.வெங்கடேசன் வேண்டுகோள்!

முதல் மூன்று மாதங்கள் கடந்தும் தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசி செலுத்த அறிவுறுத்துவது கட்டாயம். FOGSI மற்றும் FIGO போன்ற அமைப்புகள் கர்ப்பிணிகளில் தடுப்பூசிகள் குறித்து கருத்துக்களையும் வழிகாட்டுதல்களையும் வெளியிட்டு இருக்கின்றன. விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் செப்டம்பர் மாத மத்தியில் மூன்றாம் அலை வரும் என எச்சரித்து இருக்கும் சூழலில் கர்ப்பிணிகள் மீது அதிக கவனம் செலுத்துவது முக்கியம்.

கர்ப்பிணியோடு சேர்த்து கருவில் இருக்கும் சிசுவிற்கும் பாதுகாப்பு அளிப்பது முக்கியத்துவம் பெறுகிறது. முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதைப் போல கர்ப்பிணிகளுக்கும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக செலுத்த வேண்டும். ஆதலால் உடனடியாக தமிழக கர்ப்பிணி பெண்களுக்கு உதவிட முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகளை அனுப்பித் தரவேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.