சிறுவனுக்கு சூடு வைத்த தாய்… விசாரணையில் வெளியான உண்மையால் போலீசார் எடுத்த அதிரடி முடிவு!

 

சிறுவனுக்கு சூடு வைத்த தாய்… விசாரணையில் வெளியான உண்மையால் போலீசார் எடுத்த அதிரடி முடிவு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகனும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் முருகேஸ்வரி தனது மகனின் இடது கையில் சூடு வைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து குழந்தை பாதுகாப்பு ஆணையத்திற்கு புகார் சென்றுள்ளது.

சிறுவனுக்கு சூடு வைத்த தாய்… விசாரணையில் வெளியான உண்மையால் போலீசார் எடுத்த அதிரடி முடிவு!

இதையடுத்து குழந்தை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து முருகேஸ்வரி மற்றும் கருப்பசாமியிடம் விசாரணை நடத்தியதில் சிறுவன் இந்த தம்பதியினருக்கு பிறந்த குழந்தையே இல்லை என்பது தெரியவந்தது.

முருகேஸ்வரி – கருப்பசாமி தம்பதிக்கு 2 மகள்கள் இருந்ததால் ஆண் குழந்தை ஆசையில் இவர்கள் சாலையோரத்தில் இருந்த இந்த சிறுவனை இரண்டு வயதிலிருந்தே எடுத்து வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுவனுக்கு சூடு வைத்த தாய்… விசாரணையில் வெளியான உண்மையால் போலீசார் எடுத்த அதிரடி முடிவு!

இதன் காரணமாக சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் கருப்பசாமி மற்றும் முருகேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சிறுவனுக்கு சூடு வைத்த காரணத்திற்காக முருகேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அச்சிறுவனை போலீசார் மீட்டு மதுரையில் உள்ள வரவேற்பு இல்லத்தில் ஒப்படைத்தனர். அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட அந்த தம்பதியினரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.