குடும்ப தகராறில் விஷம் குடித்த 2 குழந்தைகள் பலி – தாய் கவலைக்கிடம்!

 

குடும்ப தகராறில் விஷம் குடித்த 2 குழந்தைகள் பலி – தாய் கவலைக்கிடம்!

திருப்பூர்

பல்லடம் அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தாயும் தற்கொலைக்கு முயன்றதில், குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த குப்புசாமிநாயுடுபுரத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவரது கணவர் பிரபு. இவர்களுக்கு பிருந்தா (7), பிரசாந்தா(4) என 2 மகள்கள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக கணவர் பிரபுவை பிரிந்த தமிழ்செல்வி, குழந்தைகளுடன் குப்புசாமி நாயுடுபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் தமிழ்செல்வியின் பெற்றோர், மகளை பிரபுவுடன் சேர்த்து வைக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்கு தமிழ்செல்வி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில், கணவருடன் சேர்ந்த வாழ விரும்பாத தமிழ்செல்வி, கடந்த 27ஆம் தேதி அன்று குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்று தோல்வியடைந்தார்.

குடும்ப தகராறில் விஷம் குடித்த 2 குழந்தைகள் பலி – தாய் கவலைக்கிடம்!

இந்த நிலையில், நேற்று முன்தினம் குழந்தைகள் பிருந்தா, பிரசாந்தாவுக்கு எலி மருந்தை கொடுத்து விட்டு, தானும் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் குழந்தைகள் மயங்கி கிடந்ததை கண்ட உறவினர்கள் மூவரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருததுவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழ்செல்வி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.