கணவர் இறந்ததால் வேதனை… 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று, தாயும் தற்கொலை!

 

கணவர் இறந்ததால் வேதனை… 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று, தாயும் தற்கொலை!

விருதுநகர்

சாத்தூர் அருகே கணவர் இறந்த வேதனையில், தனது 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு, தாயும் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சாத்தூர் அடுத்த ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர நாராயணன் (31). இவருக்கு செல்வி (26) என்ற மனைவியும், அனுஷ்கா (5), மாதேஸ் (3) என 2 குழந்தைகளும் உள்ளனர். சங்கர நாராயணன் குடும்ப தகராறு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். கணவர் இறந்ததால் மிகுந்த வேதனையில் இருந்த வந்த செல்வி, தனது குழந்தைகளை எப்படி வளர்ப்போம் என எண்ணி புலம்பி வந்துள்ளார்.

கணவர் இறந்ததால் வேதனை… 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று, தாயும் தற்கொலை!

இந்த நிலையில், வாழ்வை முடித்துக் கொள்ள தீர்மானித்த அவர், நேற்று கிராமத்தில் உள்ள தனியார் விவசாய கிணற்றில், தனது 2 குழந்தைகளையும் தள்ளி கொன்றுவிட்டு, பின்னர் தானும் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செல்வியின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வி மற்றும் குழந்தைகளின் சடலங்களை மீட்டனர்.
,
பின்னர், தகவல் அறிந்து அங்கு வந்த சாத்தூர் டி.எஸ்.பி ராமகிருஷ்ணன் தலைமையிலான சாத்தூர் தாலுகா போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து, சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் இறந்த வேதனையில், குழந்தைகளுடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.