செல்போனில் அம்பலப்படுத்திய காதலி… அதிர்ந்துபோன மனைவி… வெளிச்சத்துக்கு வந்த கணவனின் திருவிளையாடல்!- குழந்தையை தவிக்கவிட்டு உயிரை மாய்த்த தாய்

 

செல்போனில் அம்பலப்படுத்திய காதலி… அதிர்ந்துபோன மனைவி… வெளிச்சத்துக்கு வந்த கணவனின் திருவிளையாடல்!- குழந்தையை தவிக்கவிட்டு உயிரை மாய்த்த தாய்

ஒரு பக்கம் வரதட்சணை கேட்டு மாமியார் கொடுமை, மறுபக்கம் கணவனின் காதல் விளையாட்டை அம்பலப்படுத்திய முன்னாள் காதலி. இதனால் வேதனை அடைந்த ஐடி ஊழியரின் மனைவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

செல்போனில் அம்பலப்படுத்திய காதலி… அதிர்ந்துபோன மனைவி… வெளிச்சத்துக்கு வந்த கணவனின் திருவிளையாடல்!- குழந்தையை தவிக்கவிட்டு உயிரை மாய்த்த தாய்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலத்தை சேர்ந்த ஷோபனாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 50 பவுன் நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக்கும், வீட்டுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் வரதட்சணையாக ஷோபனா வீட்டார் கொடுத்துள்ளனர். இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு விஜயகுமார், சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் 85 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே, ஷோபனாவை வரதட்சணை கேட்டு மாமியார் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

செல்போனில் அம்பலப்படுத்திய காதலி… அதிர்ந்துபோன மனைவி… வெளிச்சத்துக்கு வந்த கணவனின் திருவிளையாடல்!- குழந்தையை தவிக்கவிட்டு உயிரை மாய்த்த தாய்

இந்த நிலையில், கொரோனா காரணமாக வேலையை இழந்துள்ளார் விஜயகுமார். இதனால் ஊர் திரும்பிய விஜயகுமாருக்கு, அவரது செல்போனில் பெண் ஒருவர் பேசியுள்ளார். இந்த போனை ஷோபனா எடுத்துள்ளார். அப்போது, நான் ஈரோட்டை சேர்ந்தவள் என்ற அறிமுகப்படுத்திக் கொண்டு, விஜயகுமார் காதலி என்று சொல்லி குண்டை போட்டுள்ளார். இதனால் அதிர்ந்துபோன ஷோனாவிடம், 41 நிமிடம் பேசிய அந்தப் பெண், விஜயகுமாரின் காதல் விளையாட்டை உடைத்துவிட்டார். இதனால் வேதனையில் இருந்துள்ளார் ஷோபனா. தனது காதல் குட்டு அம்பலமானதால் வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து உதைத்துள்ளார் விஜயகுமார். இதனால் வேதனையடைந்த ஷோபனா, தனது செல்போனில் இரண்டு வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.

செல்போனில் அம்பலப்படுத்திய காதலி… அதிர்ந்துபோன மனைவி… வெளிச்சத்துக்கு வந்த கணவனின் திருவிளையாடல்!- குழந்தையை தவிக்கவிட்டு உயிரை மாய்த்த தாய்
முன்னாள் காதலியுடன் விஜயகுமார்

ஒரு வீடியோவில், தனது கணவரின் காதலி குறித்தும், மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவது குறித்தும் பேசியுள்ளார். 2வது வீடியோவில், தன்னை கணவன் அடிக்கும்போது, வீட்டுக்குள் சென்று அறையை பூட்டி அடிக்கச்சொல்லி மாமியார் தூண்டியதாகவும் கூறியுள்ளார். மேலும், எனது குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படியும், என்னுடைய அப்பா இறந்த இடத்தின் அருகே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் தனது தாயிடம் கண்ணீருடன் கூறுகிறார். பின்னர் இந்த இரண்டு வீடியோக்களையும் தனது தாயாருக்கும், உறவினர்களுக்கும் அனுப்பிவிட்டு நேற்று காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார் ஷோபனா. இது குறித்து ஷோபனாவின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இரண்டு வீடியோக்களையும், முன்னாள் காதலி பேசிய ஆடியோவையும் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.