மகன் திருமணம் செய்ய மறுத்ததால் வேதனையில் தாய் தற்கொலை!

 

மகன் திருமணம் செய்ய மறுத்ததால் வேதனையில் தாய் தற்கொலை!

கடலூர்

பண்ருட்டி அருகே மகன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் மனமுடைந்த தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பாலூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், லட்சுமி தனது இளைய மகன் கண்ணனுக்கு (26) திருமண ஏற்பாடு செய்து வந்துள்ளார்.

மகன் திருமணம் செய்ய மறுத்ததால் வேதனையில் தாய் தற்கொலை!

ஆனால், கண்ணன் திருமணம் செய்ய மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட லட்சுமி, கடந்த வாரம் வீட்டில் தனியே இருந்தபோது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த லட்சுமி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.