“சாமி எம் மவன் ஒரு கொலைகாரன்” -பெத்த புள்ளைய போலீசில் போட்டுக்கொடுத்த தாய் .

 

“சாமி எம் மவன் ஒரு கொலைகாரன்” -பெத்த புள்ளைய போலீசில் போட்டுக்கொடுத்த தாய் .

மும்பையின் துகாட் சாவ்லைச் சேர்ந்த ஜோரி என்பவர், அவரின் நண்பர் டோலி என்பவரை கொலை செய்ததாக அவரின் தாயார் போலீசில் புகார் செய்து , தனது மகனையே போலீசில் பிடித்து கொடுத்த சம்பவம் அங்கு பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.


மும்பையின் ஜோரி என்ற 27வயது நபரும் டோலி என்ற 24 வயது நபரும் நண்பர்களாக இருந்தார்கள் .இந்நிலையில் டோலி என்பவரின் நாயை ஜோரி நான்கு நாட்களுக்கு முன்னாள் அடித்து காயப்படுயுத்தியுள்ளார் , இதனால் டோலி அவரின் நண்பர் ஜோரியிடம் வந்து தகராறு செய்துள்ளார் .அங்கு அவர்களுக்குள் தகராறு முற்றிய நிலையில் ஜோரி தன்னுடைய கூட்டாளிகளை மூன்று பேரை சேர்த்துக்கொண்டு டோலியை அடித்து கொலை செய்து வீட்டின் பின் பகுதியில் உள்ள தோட்டத்தில் புதைத்துள்ளார் .
இதனால் தன்னுடைய கணவனை நான்கு நாட்களாக காணாத அவரின்மனைவி போலீசில் புகார் கொடுத்தார் ,அவர் கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் அவரின் கணவரை பல இடங்களில் தேடி வந்துள்ளனர் .இந்நிலையில் ஜோரி என்பவரின் தாய் தன்னுடைய மகன் அவரின் நண்பர் டோலியை கொலை செய்து புதைத்த விஷயத்தை அங்குள்ள போலீசில் போட்டுக்கொடுத்தார் .இதனால் போலீசார் விரைந்து வந்து அவர் காமித்த இடத்தில் தோண்டியபோது அங்கு டோலியின் பிணம் புதைக்கப்பட்டிருப்பதை கண்டு அவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள் .பிறகு அவரின் நண்பர் டோலியை கொன்ற ஜோரியை போலீசார் கைது செய்து,அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

“சாமி எம் மவன் ஒரு கொலைகாரன்” -பெத்த புள்ளைய போலீசில் போட்டுக்கொடுத்த தாய் .