உக்ரைன்: கொலைகார மகனை காப்பாற்ற சிறைக்கு சுரங்கம் அமைத்த தாய்!

 

உக்ரைன்: கொலைகார மகனை காப்பாற்ற சிறைக்கு சுரங்கம் அமைத்த தாய்!

உக்ரைனில் கொலை வழக்கில் சிறையில் உள்ள மகனை காப்பாற்ற 35 அடி ஆழத்துக்கு சுரங்கம் அமைத்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
உக்ரைனைின் தெற்கு பகுதியில் Zaporizhia பகுதியில் உள்ள சிறைக்கு அருகே

உக்ரைன்: கொலைகார மகனை காப்பாற்ற சிறைக்கு சுரங்கம் அமைத்த தாய்!

சந்தேகத்துக்கிடமான வகையில் மணல் குவியல் இருப்பது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தினமும் ஒரு பெண்மணி வந்து மணலைப் போட்டு செல்கிறார் என்று தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பெண் சிறைச் சாலைக்கு சுரங்கம் அமைத்து வந்தது தெரியவந்தது.

உக்ரைன்: கொலைகார மகனை காப்பாற்ற சிறைக்கு சுரங்கம் அமைத்த தாய்!
51 வயதான அந்த பெண்மணியின் மகன் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டான். இதைத் தொடர்ந்து அந்த பெண்மணி சிறைச்சாலைக்கு அருகே குடிபெயர்ந்துள்ளார். தினமும் சிறைச்சாலை சுவருக்கு

உக்ரைன்: கொலைகார மகனை காப்பாற்ற சிறைக்கு சுரங்கம் அமைத்த தாய்!

அருகே வந்து சுரங்கம் அமைக்கும் வேலையில் இறங்கியுள்ளார். சத்தமே வராத இ-ஸ்கூட்டரில் வந்து தொலைவில் வண்டியை நிறுத்திவிட்டு நடந்தே சிறைச்சாலை சுவர் பகுதிக்கு வருவாராம். அங்கு 10 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி அங்கிருந்து சிறைக்குள்ளாக 35 அடி தூரத்துக்கு சுரங்கம் அமைத்திருந்தது தெரியவந்தது.
மூன்று வாரங்கள் சுரங்கம் தோண்டி சுமார் மூன்று டன் அளவுக்கு மண்ணை வெளியே கொண்டு வந்து கொட்டியுள்ளார்.

உக்ரைன்: கொலைகார மகனை காப்பாற்ற சிறைக்கு சுரங்கம் அமைத்த தாய்!

இரவு நேரத்தில் மட்டுமே அவர் சுரங்கம் தோண்டும் வேலையில் ஈடுபட்டுள்ளார். எந்த தானியங்கி ஆயுதங்களும் இன்றி, எளிய மண் வெட்டும் கருவிகளைப் பயன்படுத்தி ஒரு நாள் உள்ளே சென்று வரும் வகையில் அவர் சுரங்கம் அமைத்திருந்தது தெரியவந்துள்ளது. தற்போது அந்த தாயும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.