‘சிறிய தவறு செய்தால் பெரிய விலை கொடுக்க நேரிடும்’.. பிரதமர் மோடி உரை

 

‘சிறிய தவறு செய்தால் பெரிய விலை கொடுக்க நேரிடும்’.. பிரதமர் மோடி உரை

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 5 லட்சத்தை எட்டியுள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகிறது. இதனிடையே கொரோனா பாதிப்பு குறித்தும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் உரையாற்றி வருகிறது.

அந்த வகையில் ஐந்தாவது முறையாக ஊரடங்கு தளர்வு 2.0 குறித்து பிரதமர் மக்களிடம் உரையாற்றி வருகிறார். அதில், “நாம் செய்யக் கூடிய சிறிய தவறுகள் பெரும் விலையை கொடுக்க நேரிடலாம். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாகவே இருக்கிறது. மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிந்து வெளியே செல்ல வேண்டும். இல்லையெனில், அரசின் விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

‘சிறிய தவறு செய்தால் பெரிய விலை கொடுக்க நேரிடும்’.. பிரதமர் மோடி உரை

தொடர்ந்து , ஏழைகளுக்காக ரூ.1.75 கோடியில் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் ஒருவர் கூட பசியுடன் தூங்கக் கூடாது. ஊரடங்கு உத்தரவை பலர் முறையாக பின்பற்றாமல் பொறுப்பற்ற முறையில் இருக்கிறார்கள். கொரோனா விதியை மீறியதால் ஒரு நாட்டின் அதிபருக்கு ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டதை நாம் பார்க்கிறோம். அதனால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும், பிரதமர் முதல் சாமானியர் வரை எல்லாருக்கும் ஒரே விதி தான் என்று கூறிய அவர், கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் வரை இலவசமாக உணவு தானியங்கள் மக்களுக்கு வழங்கப்படும் என்றும் 3 மாதத்தில் 31 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி பண உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.