முக்கிய துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

 

முக்கிய துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முக்கிய துறை சார்ந்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

முக்கிய துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவை ஆட்டிப்படைத்துவருகிறது. இந்த வார தொடக்கத்திலிருந்து நாள் ஒன்றுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதனிடையே பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி உள்ளிட்டவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிக்களை மேற்கொண்டுவருகின்றன.

இந்நிலையில், கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய துறை சார்ந்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் ஆக்சிஜன், படுக்கை வசதி, தடுப்பு மருந்து உள்ளிட்டவற்றை அதிகப்படுத்துவது, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.