சட்டை பாக்கெட்டிலிருந்த ஸ்மார்ட் போன் திடீரென வெடித்ததால் பரபரப்பு

 

சட்டை பாக்கெட்டிலிருந்த ஸ்மார்ட் போன் திடீரென வெடித்ததால் பரபரப்பு

குஜராத் மாநிலம் பட்டன் நகரில் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் போன் திடீரென வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டை பாக்கெட்டிலிருந்த ஸ்மார்ட் போன் திடீரென வெடித்ததால் பரபரப்பு

ரதான்பூர் நகரில் மோட்டார் வண்டி பழுது பார்க்கும் இடமான கேரஜில் ராமச்சந்திர தாகூர் என்பவர் அமர்ந்திருந்தார். அவரது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த போன் திடீரென வெடித்து, அதிலிருந்து குபுகுபு வென புகை கிளம்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த தாகூர், உடனடியாக தனது செல்போனை பாக்கெட்டிலிருந்து எடுத்து தரையில் எரிந்தார்.

இந்த காட்சிகள் அந்த கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. இருப்பினும் செல்போன் வெடித்த விபத்தில் ராமச்சந்திர தாகூருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆதலால் தாகூர் இச்சம்பவம் குறித்து போலீசில் எந்த புகாரும் அளிக்கவில்லை.