“அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் கருணாநிதி மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்”

 

“அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் கருணாநிதி மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்”

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அழகிரி கூறியதன் அடிப்படையில் கருணாநிதி மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, “2001ஆம் ஆண்டிற்கு பின்னர் நடைபெற்ற நான்கு சட்டமன்ற தேர்தல்களில் 100 இடங்களை கூட திமுகவால் பெற முடியவில்லை. 2021 ஆம் ஆண்டிலும் திமுக வெற்றி பெற முடியாது. திமுகவை விட அதிமுக பன்மடங்கு வியூகம் வைத்து தேர்தலை சந்திக்கிறது. அதிமுக கொண்டு வந்த திட்டங்களை நாங்கள் உரிமை கொண்டாடி வருகிறோம். நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை உரிமை கொண்டாட எங்களுக்கு முழு உரிமை உள்ளது.

“அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் கருணாநிதி மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்”

கருணாநிதியின் உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல் வலுக்கட்டயமாக ஸ்டாலின் கருணாநிதியை தேர்தலில் நிற்க வைத்தார் என அழகிரி குற்றம் சாட்டியுள்ள நிலையில் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து முக.ஸ்டாலின் பேசி வருவது சரியாக இருக்காது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அழகிரி கூறியதன் அடிப்படையில் கருணாநிதி மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்” எனக் கூறினார்.