மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா கோரி எம்எல்ஏ மனு

 

மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா கோரி எம்எல்ஏ மனு

திருப்பத்தூர்

மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம், திமுக எம்எல்ஏ நல்லதம்பி மனு வழங்கினார். அந்த மனுவில், ஜவ்வாது மலையில் அமைந்துள்ள புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு, பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 70 ஆண்டுகளாக அப்பகுதியில் வீடுகட்டி வசிப்பதாகவும், மின்னிணைப்பு, குடும்ப அட்டை ஆகியவற்றை பெற்றிருந்த போதும், அவர்கள் குடியிருக்கும் பகுதி அரசு புறம்போக்கு நிலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா கோரி எம்எல்ஏ மனு

இதனால், கடும் சிரமத்திற்கு உள்ளாகிய மலைவாழ் மக்களுக்கு அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். கோரிக்கை மனுவை பெற்றுகொண் நேர்முக உதவியாளர், விசாரணை மேற்கொண்டு, விரைவில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.