”அன்பின் வழியது உயிர்நிலை” இளைஞரை பாரட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

”அன்பின் வழியது உயிர்நிலை” இளைஞரை பாரட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழி, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்த கணேஷ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Image

கணேஷ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழி, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்து, அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு டேக் செய்திருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த படத்தைப் பகிர்ந்து, “அன்பின் வழியது உயிர்நிலை” என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்!” என பாராட்டியுள்ளார்.